திருப்பூரில் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், காட்டன் மில் சாலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (59), மரம் இழைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி குமாரி. இவர்களது மகன் ரஞ்சித். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு குமார் குடும்பத்தாருடன் மொட்டி மாடியில் தூங்கச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலையில் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.