திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.53 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி 12 ஆவது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் ரூ. 28.50 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், அதே வார்டில் உள்ள மகாலட்சுமி நகரில் ரூ. 31.50 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தொடங்கிவைத்தார்.
மேலும், 13 ஆவது வார்டில் உள்ள கிருஷ்ணா நகர், சாரதா நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், 47ஆவது வார்டில் முத்துசாமி வீதி, கல்லூரிச் சாலை 3ஆவது வீதி ஆகிய பகுதிகளில் ரூ. 15.50 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள், ஸ்டேண்ட் சாலையில் ரூ. 19.40 லட்சம் மதிப்பிலான தார் சாலை பணிகள் என மொத்தம் ரு.1.53 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர்கள் வாசுக்குமார், கண்ணன், உதவிப் பொறியாளர்கள் சுப்பிரமணி, ஹரி, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.