அவிநாசி அருகே மின் கம்பத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதி ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
திருப்பூர் மாவட்டம், சேவூரில் இருந்து சுண்டக்காம்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. ஆலாங்காட்டுப்பாளையம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதியது.
இதில் மின்கம்பம் முறிந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில், அருகில் இருந்தவர்கள் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.