பள்ளியையொட்டி மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
By DIN | Published On : 04th January 2019 07:27 AM | Last Updated : 04th January 2019 07:27 AM | அ+அ அ- |

அவிநாசியில் அரசு பள்ளியையொட்டி, மின்மாற்றி, மின் கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அவிநாசி பேருராட்சிக்கு உள்பட்ட ஈரோடு சாலை அம்பேத்கார் வீதியில் அரசு துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் வளாகத்துக்குள் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவரையொட்டி , புதிதாக மின் கம்பமும், புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டு0ம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.