அவிநாசியில் நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி சாவு

அவிநாசியில் நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார்.

அவிநாசியில் நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார்.
அவிநாசி கங்கவர் வீதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (52). கட்டடத் தொழிலாளி.  இவர் அவிநாசி தாமரைக்குளத்தில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். 
இது குறித்து தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com