திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 19 இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் சனிக்கிழமை (ஜ


திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் சனிக்கிழமை (ஜனவரி 19) நடைபெற உள்ளது. 
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் சனிக்கிழமை (ஜனவரி 19) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் நடைபெறவுள்ளது. 
இக்குறைதீர்க்கும் நாள் முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்க உள்ளனர். 
முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் வள்ளிபுரம், திருப்பூர் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல், திருப்பூர் தெற்கு வட்டத்தில் வேலம்பட்டி கிராமம், ஊத்துக்குளி வட்டத்தில் புஞ்சைத்தளவாய்பாளையம், பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி, உடுமலைப்பேட்டை வட்டத்தில் ராவணாபுரம் , மடத்துக்குளம் வட்டத்தில் வேடப்பட்டி, தாராபுரம் வட்டத்தில் காங்கேயம்பாளையம், காங்கயம் வட்டத்தில் சிவன்மலை ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. 
இதில் கூட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com