திருப்பூர் ரயில் நிலையத்தில் பெண் சடலம் மீட்பு

திருப்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த பெண் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு


திருப்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த பெண் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருப்பூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த பெண்ணுக்கு சுமார் 55 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com