திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல நிகழாண்டும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கோலப் போட்டி, பொங்கல் போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன், துணை முதல்வர் ஏ. தயாளராஜன், உடற்கல்வி இயக்குநர்கள் ஆ. மதன், ரத்தினகுமார், நூலகர் எஸ்ஏ.முத்துபாரதி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.