இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் சாவு

நத்தக்காடையூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், வாகனத்தை ஓட்டி வந்த இருவருமே உயிரிழந்தனர்.

நத்தக்காடையூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், வாகனத்தை ஓட்டி வந்த இருவருமே உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (32).  சென்னிமலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் புளூமெட்டல் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் முத்தூரில் இருந்து நால்ரோடுக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் நத்தக்காடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பழையகோட்டைப்புதூர் அருகே ஊஞ்சமரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம் (65), செல்லம்மாள் (58). இருவரும் சென்னிமலையில் உள்ள அவர்களது பேத்தி வீட்டுக்குச் சென்றுவிட்டு,  இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மதியம் 1.15 மணியளவில், நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில், பழையகோட்டைப்புதூர் அருகே சாலை வளைவில் இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த செல்லம்மாளை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காங்கயம் போலீஸார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com