சேவூர் அருகே பூப் பறிக்கும் நிகழ்ச்சி

தைப்பொங்கல் திருவிழாவையொட்டி சேவூர் அருகே பழைமை மாறாமல் நடைபெற்ற பூப்பறிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமனோர் பங்கேற்றனர். 

தைப்பொங்கல் திருவிழாவையொட்டி சேவூர் அருகே பழைமை மாறாமல் நடைபெற்ற பூப்பறிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமனோர் பங்கேற்றனர். 
தை பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கலான புதன்கிழமை சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி ராமியம்பாளையத்தில் ஊர் பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்றிணைந்தனர். பிறகு வீடுகளில் செய்த முருக்கு, இனிப்பு வகைகள், பொறி கடலை, கரும்பு ஆகிய உணவு பண்டங்களை கொண்டு வந்து உணவு பொருள்களை நடுவே வைத்து கும்மி அடித்து பாட்டுப் பாடினர். பின் அவரவர்கள் செய்து கொண்டு வந்த கார, இனிப்பு வகைகளை மற்றவர்களுடன் அமர்ந்து  உண்டு மகிழ்ந்தனர்.  
பூ பறிக்கும் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com