வெள்ளக்கோவிலில் திருமணமான இளம்பெண்தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம் சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கரண்டாம்பாளையத்தை அடுத்த வேலப்பம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் மோனிஷா (22). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து நான்கு வாரங்கள் ஆகிறது.
இந்நிலையில் காமராஜபுரம் கணவர் வீட்டில் தனியாக இருந்த மோனிஷா மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. தாராபுரம் கோட்டாட்சியர், காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.