எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில்  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102 பிறந்த நாள் விழா

திருப்பூரில்...
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில்  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102 பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள எம்ஜிஆர்சிலைக்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), அவைத் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தெற்குத் தொகுதியில்: திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம், சந்திராபுரம், சந்தைபேட்டை, நல்லூர், அரசு மருத்துவமனை, குமரன் வணிக வளாகம் ஆகிய 6 அம்மா உணவகங்களில் அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் தலைமையில் 6 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கருவம்பாளையம் மணி உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர். 
வடக்குத் தொகுதியில்:  வடக்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட பெருமால்லூர் நால் ரோடு பகுதியில் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் ஆர். சாமிநாதன், ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ். எம். பழனிசாமி, ஒன்றிய இணைச் செயலாளர் சரஸ்வதி ராக்கியண்ணன்,  பாசறை செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலனூரில்...
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் எம்ஜிஆர் பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அதிமுக ஒன்றியச் செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். கட்சியின் பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணியம், தொழிலதிபர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 விழாவில், ஊராட்சி முன்னாள் தலைவர்கள் கருப்பண்ணவலசு முத்துக்குமார், வேலாம்பூண்டி வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலையில்...
உடுமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவர் வழக்குரைஞர் கே.ம னோகரன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
இதேபோல உடுமலை ஒன்றியத்தில் முக்கோணம், தளி உள்ளிட்ட கிராமங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, ஆர்.ஜி.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். மேலும், மடத்துக்குளம் வட்டத்தில் வேடபட்டி, துங்காவி உள்ளிட்ட கிராமங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.கா ளீஸ்வரன், வழக்குரைஞர் அணி இணைச் செயலாளர் மு.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


சேவூரில்...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
 சேவூர் கைகாட்டியில் மலர் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அதிமுக கொடியேற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு,  அதிமுக ஒன்றியச் செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி, பொறுப்பாளர் சி.எஸ்.மனோகரன், சின்னக்கன்னு, தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com