திருப்பூரில் டிடிபி மில் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருப்பூர், பெரியார் காலனியை அடுத்த நடராஜ் லே அவுட்டில் வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மகன் அருண்குமார் (22). இவர் இருசக்கர வாகனத்தில் டிடிபி மில் சாலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.