காங்கயம்
காங்கயம், ஜன.18: காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.