திருப்பூரில் நாளை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஃப்ரண்ட்லைன் அகாதெமி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) நடைபெற உள்ளது. 

திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் ஃப்ரண்ட்லைன் அகாதெமி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) நடைபெற உள்ளது. 
 9, 13, 17 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் பொது பிரிவுகளில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் மற்றும் பொது பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சார்பில் ஏப்ரல்,  மே மாதங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. மேலும், பொதுப் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.11 ஆயிரத்து 500 ரொக்கம் வழங்கப்படுகிறது.  இத்துடன் ஸ்ரீ சதாசிவம் நினைவு சுழற்கோப்பை வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 96266-31032 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com