வெள்ளக்கோவில் செம்மை நகர் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) நடைபெறுகிறது.
லக்கமநாயக்கன்பட்டி சிவாலய அர்ச்சகர் எல்.டி.செந்தில்நாத சிவாச்சாரியார், வெள்ளக்கோவில் சோழீஸ்வரர் கோயில் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கோபுரக் கலசங்கள் ஸ்தாபனம், புண்ணிய தீர்த்தங்கள் எடுத்து வரும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.