காங்கயத்தில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை சகோதயா சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பின் 3-ஆவது கைப்பந்து போட்டி காங்கயம் அருகே உள்ள காடையூர் விவேகானந்தா அகாதெமி பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கோவை, ஈரோடு, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட கைப்பந்து அசோசியேஷன் நடுவர் மற்றும் பயிற்சியாளர்கள் இப்போட்டிகளை முன்னின்று நடத்தினர்.
இதில், காடையூர் விவேகானந்தா அகாதெமி மாணவ, மாணவிகள் போட்டிகளில் முதலிடம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியின் பட்டத்தை வென்றனர்.
முன்னதாக போட்டிகளை பள்ளியின் நிர்வாகத் தலைவர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் எஸ்.பத்மநாபன் வரவேற்றார். பள்ளி செயலாளர் எம்.சுப்ரமணியம் நன்றி கூறினார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்ள், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகரன், பொம்முராஜ், சசிப்ரீதா ஆகியோரை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.