வெள்ளக்கோவிலில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தைச் சேர்ந்தவர் மணி மகன் அங்குராஜ் (எ) பிரபு (28). இவர் கண்ணபுரம் மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து வந்தார். பிரபுவும், அவருடைய உறவினர் மனோகர் (45) இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் வந்தபோது நகராட்சி அலுவலகம் அருகே ஒரு மொபட் மீது மோதி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது, பின்னால் வந்த ஒரு மினி டெம்போ பிரபு மீது ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காயமடைந்த மனோகர் வெள்ளக்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.