மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


கர்நாடகத்தில் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.இதில், பங்கேற்ற அக்கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், கோபால்சாமி, ராமசாமி, அனுஷம் வேலுசாமி, சித்திக், துணைத் தலைவர்கள் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில்...
அதே போல தாராபுரம் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். இதில், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தாராபுரம் காங்கிரஸ் நகர தலைவர் குறிஞ்சி செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் உடுமலை ஜனார்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com