திருப்பூர் மாநகரில் பொது இடங்களில் மரம் வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சஞ்சய்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாநகரில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, திருப்பூர் மாநகரில் உள்ள மரங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.