திருப்பூர்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டுக் கடன் முகாம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டுக்கடன் வழங்கும் முகாம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் வீட்டுக்கடன் வழங்கும் முகாம் அவிநாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் அவிநாசி கிளை சார்பில் வீட்டுக்கடன் வழங்கும் முகாம் அவிநாசியில் நடைபெற்றது. வங்கி மேலாளர் ஜெயமோகன் தலைமை வகித்தார். இதில், வீடு கட்டவும், வீட்டு மனை வாங்கவும், வணிக வளாகம், கட்டடங்கள் கட்டவும் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த முகாமில் மொத்தமாக ரூ. 8 கோடிக்கு கடன் வழங்க அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் கடன் பெறுவோருக்கு தகுதியில் அடிப்படையில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ. 2.67 லட்சம் மானியமும் பெற்றுத் தரப்பட்டது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜேம்ஸ், ரகுநாத், விக்னேஷ், முத்துவிக்னேஷ் பாலாஜி, சரவண வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.