வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.


திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி முன்புறம் உள்ளது ஒத்தக்கடை. இதனருகே ஒரு அரசுப் பேருந்தும், காரும் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  வெள்ளக்கோவில் போலீஸார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com