நூற்பாலை மேலாளர் கொலை
By DIN | Published On : 19th July 2019 09:27 AM | Last Updated : 19th July 2019 09:27 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே கந்தம்பாளையத்தில் நூற்பாலை மேலாளர் புதன்கிழமை இரவு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அவிநாசி அருகே உள்ள செம்பியநல்லூர், கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்அம்மாசை மகன் கணபதி (30). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் புதன்கிழமை இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது இவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் சந்தேகப்படும்படியான 3 நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.