முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்த ஊர் பொதுமக்கள்
By DIN | Published On : 30th July 2019 08:38 AM | Last Updated : 30th July 2019 08:38 AM | அ+அ அ- |

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஊர் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சேகரித்தனர்.
திருப்பூர், காவிலிபாளையம்புதூர் பகுதியில் உள்ள ட்ரீம் 20 பசுமை அமைப்பினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அங்குள்ள பல்வேறு வீதிகள், சாக்கடைக் கால்வாய்கள், பள்ளி வளாகம், காலியிடங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்தனர். தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களையும் சேகரித்தனர்.
இதையடுத்து 25 சாக்குகளில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்டுத்தவதில்லை என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.