வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 10.21 லட்சத்துக்கு தேங்காய் கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் தேங்காய் கொப்பரை ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 35 விவசாயிகள் தங்களுடைய 288 மூட்டைகள் தேங்காய் கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூரிலிருந்து 9 வணிகர்கள்
வந்திருந்தனர்.
விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ. 47.80 முதல் ரூ. 87.25 வரை தேங்காய் கொப்பரை விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 10 லட்சத்து 21 ஆயிரத்து 735 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.