காவல் துறையினருக்கும்  தலைக்கவசம் கட்டாயம்

வெள்ளக்கோவிலில் அனைத்து காவல்துறையினரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவிலில் அனைத்து காவல்துறையினரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயரதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டிய காவலர்களும், போக்குவரத்துக் காவலர்களும்கூட தலைக்கவசம் அணிவதில்லை. காவலர்கள் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com