சாலை விபத்தில் விவசாயி பலி

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தார்.


வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விவசாயி உயிரிழந்தார்.
வீரசோழபுரம் கிராமம், பச்சாக்கவுண்டன்வலசைச் சேர்ந்தவர் விவசாயி வேலுசாமி (63). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஓலப்பாளையத்தில் இருந்து காங்கயம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8) சென்று கொண்டிருந்தார். அப்போது, கொழிஞ்சிக்காட்டுவலசு பிரிவு அருகே எதிரே வந்த கார் மோதி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேலுசாமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com