பயிர் காப்பீடு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 திருப்பூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  நிகழாண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டமானது அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் முகமையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. 
காரீப் பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, சோளம், எள்ளு ஆகிய வேளாண் பயிர்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வரையும், மா, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மஞ்சள் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். 
தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பருத்திக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத் தொகையில் 5 சதவீதம் பிரீமிய தொகையும், இதர வேளாண்மை பயிர்களுக்கு 2 சதவீதம் பிரீமிய தொகையும் செலுத்த வேண்டும். இதன்படி மக்காளச்சோளத்துக்கு ரூ.1,319, பயறு வகை பயிர்களுக்கு ரூ.778,  நிலக்கடலைக்கு ரூ.1,359, சோளத்துக்கு ரூ.511, பருத்திக்கு ரூ.3,186, எள்ளுக்கு ரூ.615, தக்காளிக்கு ரூ.3,335, வெங்காயத்துக்கு ரூ.4,742, மஞ்சளுக்கு ரூ.9,102, வாழைக்கு ரூ.10,053, மரவள்ளிக்கு ரூ.3,730, மா பயிருக்கு ரூ.2,532 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல், விதைப்பு சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமிய தொகை செலுத்தி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து பயிர் காப்பீடு ரசீது பெற்று இடர்பாடு ஏற்படும் காலங்களில் உரிய காப்பீட்டு தொகை பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.
 மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்புகொள்ளவும். கூடுதலாக பயிர் காப்பீடு விவரங்களை தங்களது செல்லிடப்பேசியில் உள்ள உழவர் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com