வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி சாவு

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் வர்ஷா (15). இவர் திருப்பூர், குமார் நகர் 60 அடி சாலையில்

திருப்பூர், அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் வர்ஷா (15). இவர் திருப்பூர், குமார் நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 
இந்த நிலையில், வர்ஷா வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள கழிவறைக்குச் சென்று வந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளி நிர்வாகிகள் அவரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வர்ஷாவைக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com