வெள்ளக்கோவிலில் சமூக நல ஆர்வலர்களால் பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கே.பி.சி. நகரில்இந்த மாலை நேர வகுப்பினை தன்னார்வலர் கே.ஜி.நட்ராஜ் துவக்கி வைத்தார். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இங்கு இலவச மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது.
தற்போது முதல்கட்டமாக 30 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளியைச் சேர்ந்த சம்பூர்ணம், கற்பகம் ஆகியோர் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.