வேன் மோதி முதியவர் சாவு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணியம் (56).   இவர் அவிநாசி, நாதம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 
இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com