உடுமலை அருகே தமிழக- கேரள எல்லையில் உள்ள மலைக் கிராமங்களில் நக்ஸல் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதிரடிப் படையினர், போலீஸார், வனத் துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையை ஞாயிற்றுக்கிழமை துவங்கினர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 15க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் தமிழக வனப் பகுதிக்கு உள்பட்ட குழிப்பட்டி, குருமலை மற்றும் மஞ்சம்பட்டி, தளிஞ்சி, கோடந்தூர், சின்னார் மற்றும் கேரள வனப் பகுதிக்கு உள்பட்ட சம்பக்காடு ஆகிய மலை கிராமங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக இந்த மலை கிராமங்களில் உளவுத் துறையினர் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய மலை கிராமத்தில் சனிக்கிழமை இரவில் 10 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடியதாக மலைவாழ் மக்கள் வனத் துறையிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அதிரடிப்படை போலீஸார் மற்றும் உடுமலை, அமராவதி, பழனி, கொடைக்கானல் ஆகிய வனச் சரகத்தில் பணியாற்றி வரும் வன அலுவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி ஆகிய கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். அப்போது யாரும் பிடிபடவில்லை.
இந்நிலையில், கொடைக்கானல் மற்றும் கேரள எல்லையை அடுத்துள்ள வனச் சரகங்களுக்கு உள்பட்ட மலை கிராமங்களுக்குள் மர்ம நபர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நக்சல் நடமாட்டத்தைக் கண்காணிக்க தமிழக-கேரள அதிரடிப்படை மற்றும் வனத் துறை இணைந்து தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:
தமிழக- கேரள எல்லையில் உள்ள மலைக் கிராமங்களில் நடமாடும் மர்ம நபர்கள் நக்ஸல் தீவிரவாதிகள்தானா என விசாரணை நடத்தப்படுகிறது. இருப்பினும் இரு மாநில எல்லையில் உள்ள மலைக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வனத் துறையினர், அதிரடிப் படை போலீஸார் ஒத்துழைப்புடன் இந்தத் தேடுதல் வேட்டையை நடத்த உள்ளோம் என்றார்.
பஞ்சாப் இளைஞர் கைது: உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை அருகில் சனிக்கிழமை நள்ளிரவில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் நடமாடுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அமராவதி வனச் சரகர் முருகேசன் தலைமையில் சென்ற வன அலுவலர்கள் அணைப் பகுதியில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
அப்போது, அணை அருகே ஒருவர் இருட்டில் அமர்ந்திருந்திப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த நபரை வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் பெயர் சுபய் என்பதும், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவருக்கும் வனப் பகுதிக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
O
P
E
N
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
உங்கள் கருத்துகள்
Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.
The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.