நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ. 27 லட்சத்துக்கு விற்பனையாகின.
பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 110 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 62 மாடுகள் மொத்தம் ரூ. 27 லட்சத்துக்கு விற்பனையாகின. இதில், அதிகபட்சமாக ரூ. 86 ஆயிரத்துக்கு காங்கயம் இன மயிலைப் பசு கன்றுக் குட்டியுடன் விற்பனையானது.