நிலுவைத் தொகை வழங்கக் கோரி துப்புரவு ஊழியர்கள் முற்றுகை

அவிநாசியில் துப்பரவு ஊழியர்களுக்கு ஊதியம், நிலுவைத் தொகை வழங்கக்கோரி,  திருப்பூர் மாவட்ட சிஐடியூ ஊரக

அவிநாசியில் துப்பரவு ஊழியர்களுக்கு ஊதியம், நிலுவைத் தொகை வழங்கக்கோரி,  திருப்பூர் மாவட்ட சிஐடியூ ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
இது குறித்து அச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட தலைவர் பி.பழனிசாமி ஆகியோர் கூறியதாவது:
அவிநாசி ஒன்றியத்தில் 31 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் சுமார் 200 மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியமும், 2017 அக்டோபர் முதல் நிலுவைத் தொகையையும் முறையாகக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என பல முறை நேரில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்டத்தில் உள்ள மற்ற ஒன்றியங்களில் அரசாணை 303-ன் படி, ஊதிய நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. ஆனால், அவிநாசி ஊராட்சிகளில் குறைவாக ஊதியம் வழங்கப்படுகிறது. 
இதேபோல கடந்த 2017 அக்டோபர் முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்கவில்லை. எனவே, காலதாமதமின்றி உரிய முறையில் ஊதியம், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி கூறுகையில், "இம்மாத இறுதிக்குள் 7 ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கப்படும்' என்றார்.
அதைத்தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com