மூலனூரில் சாலை விபத்துகளில் 2 பேர் சாவு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.
 கரூர் எல்.ஜி.பி. நகரைச் சேர்ந்தவர் பிரபு (38). இவருடைய மனைவி ரம்யா (32). பிரபுவின் தாயார் ஜெயலட்சுமி (65). இவர்களது உறவினர் ராஜவேல் மனைவி கல்பனா (41). இவரது மகள் ஸ்ரேயா (13).
 இவர்கள் 5 பேரும் காரில் பழனி முருகன் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
  கரூர் - தாராபுரம் சாலையில் மூலனூர் அருகே சென்றபோது கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில், காரை ஓட்டி வந்த பிரபு உள்பட 5 பேரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஜெயலட்சுமி வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 மற்றொரு விபத்து: மூலனூர் ஓசபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (42). இவருடைய மனைவி ரம்யா (32). இவர் முத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்ப பேருந்தில் கன்னிவாடிக்கு வந்துள்ளார்.
 பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல தனது கணவரை செல்லிடப்பேசி மூலம் அழைத்துள்ளார். அதைத் தொடர்ந்து ராஜ்குமார், தனது மகள் கெளசல்யாவுடன் (13) இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
 அப்போது, கன்னிவாடி அருகே சாலை வளைவில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானார். இதில், பலத்த காயமடைந்த ராஜ்குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கெளசல்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
 இந்த இரு விபத்துகள் குறித்தும் மூலனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com