பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 பட்டமளிப்பு விழாவில் பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.குருமூர்த்தி, சென்னை மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தின் துணை நிறுவனர் லதா பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 500 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கிப் பேசினர்.
 மதியம் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சென்னை உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி பங்கேற்று, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
  மாலையில் நடைபெற்ற கல்லூரியின் 10-வது ஆண்டு விழாவில், புட்சட்னி சேனலின் தலைவர் ராஜ்மோகன் ஆறுமுகம் பங்கேற்றுப் பேசினார். பின்னர் பல்கலை. அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 இவ்விழாவில், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் தலைவர் வி.சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் ஆர்.பி.செல்வசுந்தரம், செயலாளரும் தாளாளருமான பி.பாலசிவகுமார், கல்லூரியின் பொருளாளர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி, அறக்கட்டளை உறுப்பினர்கள் சி.தேவராஜன், எஸ்.எஸ்.நடராஜன், கல்லூரி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com