சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் செயலர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழில்களுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பளம் விரித்து, உலகத்தின் குப்பைத் தொட்டியாக நம் நாட்டை மாற்றி வருவது வேதனைக்குரியது.
கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் கொண்டு செல்லும் விவசாய விளைபொருள்கள் கம்போஸ்ட் உரமாக விளைநிலங்களுக்குத் திரும்பி வரவேண்டும். எரிக்கவோ, ஆறுகளில் கொட்டவோ, கடலில் கொட்டவோ கூடாது.
மாசு ஏற்படுத்தும் ஆலைகளை தடைசெய்ய வேண்டும். பிளாஸ்டிக் தடைபோல, நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கும் படிப்படியாகத் தடை விதித்து ஒருகட்டத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு முற்றிலுமாக தடைவிதிக்க வேணடும். தவறினால் நாடு காலப்போக்கில் பாலைவனமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.