பல்லடத்தில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏஐடியுசி நிர்வாகி எஸ்.சாகுல்அமீது தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ப.கு.சத்தியமூர்த்தி, ஆர்.பரமசிவம் (சிஐடியூ), திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.மணி, ஏஐடியுசி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கே.மூர்த்தி ஆகியோர் பேசினர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி நன்றி கூறினார்.