காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (மே 6) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: ஓலப்பாளையம், பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு.
பழையகோட்டை துணை மின் நிலையம் : பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.
காடையூர் துணை மின் நிலையம் : காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.