சாலை விபத்தில் விவசாயி பலி
By DIN | Published On : 06th May 2019 02:59 AM | Last Updated : 06th May 2019 02:59 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சுந்தராடிவலசைச் சேர்ந்தவர் குப்புசாமி (58). இவர் தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் வாரச் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தார். வழியில், மூலனூர் சாலை சொரியங்கிணத்துப்பாளையம் பிரிவு அருகே, எதிரே வந்து கொண்டிருந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக குப்புசாமி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட நிலையில் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.