வீடு புகுந்து திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது

அவிநாசி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற இரு கல்லூரி மாணவர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

அவிநாசி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற இரு கல்லூரி மாணவர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி அருகே பழங்கரை பகுதியில் வசித்து வருபவர் வரதராஜன் (45), ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது குடும்பத்துடன் வீட்டின் மேல்தளத்தில் படுத்து புதன்கிழமை இரவு உறங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் சுற்றுச்சுவரைத் தாண்டி வீட்டுக்குள் குதித்து திருட முயற்சித்துள்ளனர். 
சப்தம் கேட்டு ஓடி வந்த வரதரஜன், பொதுமக்கள் உதவியுடன் மர்ம நபர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
போலீஸார் விசாரணையில், அவர்கள் திருமுருகன்பூண்டி, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த ரவி மகன் கோகுல் கிஷோர் (19), அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம் பட்டத்தரசியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் கிருபா சங்கர் (20) என்பதும், இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. 
இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com