ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில் திருமங்கலம் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு மே 19 இல் நடைபெறுகிறது.
இங்கு கடந்த மாதம் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, திருமங்கலம் வாக்குச் சாவடி எண் 248 இல் பதிவான வாக்குகளுக்கும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் காட்டிய எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது. வாக்குப் பதிவுக்கு முன் நடந்த மாதிரி வாக்குப் பதிவை அழிக்காமல் விட்டதால் இந்தக் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது திருமங்கலம் வாக்குச் சாவடியில் மட்டும் மே 19 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 7 வரை மறு வாக்குப் பதிவு நடைபெறும்
என காங்கயம் வட்டாட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.