முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மின்மாற்றியை இடம் மாற்றம் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 09:09 AM | Last Updated : 15th May 2019 09:41 AM | அ+அ அ- |

அவிநாசி, சேவூர் அருகே விபத்தை ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலையோரம் உள்ள மின் மாற்றியை இடம் மாற்றம்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி - புளியம்பட்டி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேவூர் அருகே சூரிபாளையம் பிரிவில் உள்ள மின்மாற்றி வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக விபத்து ஏற்படும் வகையில் உள்ளது.
எனவே இந்த மின்மாற்றியை இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.