ரூ.16.84 லட்சத்துக்கு  தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.16.84 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.16.84 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏல விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் தங்களுடைய தேங்காய் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 463 மூட்டைகள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 23,114 கிலோ. கரூர், வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூர் பகுதிகளில் இருந்து 9 வியாபாரிகள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். கிலோ ரூ.45.15 முதல் ரூ.87.15 வரையில் ஏலம் போனது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.16 லட்சத்து 84 ஆயிரத்து 291 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com