முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
இருசக்கர வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
By DIN | Published On : 18th May 2019 07:02 AM | Last Updated : 18th May 2019 07:02 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், சூலூர், கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது மனைவி தமிழ்செல்வி (26). இவர்களது மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா (3). இவர்கள் நான்கு பேரும் குடியாத்தத்தில் இருந்து, சூலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
அவிநாசி புறவழிச்சாலை அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ், தமிழ்செல்வி ஆகியோர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிறுமி நித்திகா மட்டும் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.