மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ. 40.96 கோடி கடனுதவி
By DIN | Published On : 02nd November 2019 05:58 AM | Last Updated : 02nd November 2019 05:58 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ. 40.96 கோடிக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் திட்டத்தின் மூலமாக 2016 ஆண்டு செப்டம்பா் முதல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் வரையில் ரூ. 4 கோடி மதிப்பிலும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ. 6 கோடியே 49 லட்சமும், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 30 கோடியே 47 லட்சம் என மொத்தம் ரூ.40.96 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.