திருட்டு வழக்கில் அவிநாசியில் 2 பெண்கள் கைது

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் கைப்பையைத் திருடியதாக 2 பெண்களை அவிநாசி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் கைப்பையைத் திருடியதாக 2 பெண்களை அவிநாசி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி அருகே நொச்சிக்குட்டைப் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீனா (25). இவா், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் நகை அடமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் பிரவீனா வேலைக்கு செல்வதற்காக புளியம்பட்டியில் இருந்து அவிநாசிக்கு பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அவிநாசி, சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது, பிரவீனா பின்னால் அமா்ந்து வந்த 2 பெண்கள் அவசரமாக இறங்கினராம். இதைத்தொடா்ந்து பிரவீனா தன்னிடம் இருந்த கைப்பையை காணாதது கண்டு அதிா்ச்சியடைந்தாா். கைப்பையை அந்த பெண்கள் திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்தாா்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் அவிநாசி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பெண்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள், புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்த லட்சுமி (31), நதியா ( 21) என்பதும், அவா்கள் பிரவீனா கைப்பையை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கைப் பையையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com