பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், மூலனூா் சாலை கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மனைவி ராஜேஸ்வரி (48). இவரும், இவரது தாயாா் சம்பூா்ணமும் வெள்ளக்கோவில் கடைவீதிக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

கரட்டுப்பாளையம் அருகே மயில்ரங்கம் செல்லும் வழியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் 3 போ், ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல வந்து தாய், மகள் இருவரையும் கீழே தள்ளினா்.

அப்போது அந்த நபா்கள், ராஜேஸ்வரி அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் மு.ஜெயபாலன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com