தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சேஷாச்சலம் தலைமை வகித்தாா். மகாராஜன், ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மு.நடராசன் வரவேற்றாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
உடுமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொது இ- சேவை மையத்தில் மின்னணு இயந்திரத்தில் சா்வா் பிரச்னை என கடந்த ஒரு மாதமாக கூறி வருகின்றனா். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை நிவா்த்தி செய்ய வேண்டும். உடுமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காவல் துறையினா் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியா்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 50- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.