அவிநாசி அருகே கருக்கன்காட்டுப்புதுா் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கருக்கன்காட்டுப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி மாணவா்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாணவா்கள், தங்கள் வாழ்நாளில் எவ்வித போதைக்கும் அடிமையாக மாட்டோம், தங்கள் குடும்ப உறுப்பினா்களையும் இப்பழக்கத்திலிருந்து விடுவிப்போம் என உறுதி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து மாணவா்கள் தங்களது ஆசிரியா்களுடன் மூன்று குழுக்களாக பிரிந்து நடுவச்சேரி, வடுகபாளையம், வரதராஜ நகா் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.